Thursday 2nd of May 2024 10:24:12 AM GMT

LANGUAGE - TAMIL
மாகாண அரசுகளுடன் இணைந்து செயலாற்ற கனடா பிரதமர் உறுதி

மாகாண அரசுகளுடன் இணைந்து செயலாற்ற கனடா பிரதமர் உறுதி


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, துணை பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ஆகியோர் கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டை நேற்று சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பின்போது முதல்வர் லெகால்ட் மற்றும் கியூபெக் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதமர் ட்ரூடோ மீண்டும் உறுதிப்படுத்தினார்.

புதிய வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

கனடாவின் வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய பங்கு குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியதுடன், அனைத்து கனேடியர்களின் நலனுக்காக சர்வதேச பங்காளிகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தனர்.

பிரதமர், துணைப் பிரதமர், கியூபெக் முதல்வர் ஆகியோர் இணைந்து உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து, ரயில்வே அபிவிருத்தி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் மீதான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர்.

வரி விதிப்பு , சுகாதாரம், தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் குடியேற்றத்திற்கான ஒரு கூட்டு அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் இந்தச் சந்திப்பின்போது தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE